ஒண்டி வீரன் நினைவு நாள், புலித்தேவன் பிறந்த நாள்.. நெல்லை மாவட்டத்தில் 144 தடை
நெல்லை: ஓண்டி வீரன் நினைவு நாள், புலிதேவன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிககப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமம் மஜரா பச்சேரியில் நாளை ஓண்டி வீரன் நினைவு நாளு்ம், செப் 1ம் தேதி புலிதேவர் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்சசி நடக்கும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு பிரிவினர் கலந்து கொள்கின்றனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைப்பிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும வகையில் இந்த வழியாக வாடிக்கையாக செல்லும் வாகனங்கள், வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், அத்திவாசிய பொருட்கள கொண்டு செல்லும் வாகனங்கள், வழக்கமாக செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவை செல்லலாம்.
இதர வாகனங்கள் ஆகிய டூரிஸ்ட் மோட்டார் கேப்ஸ், மேக்ஸி கேப்ஸ், ஆம்னி பஸ், மற்றும் ஓண்டி வீரன் நினைவு தினம், மற்றும் புலிதேவன் பிறந்ததினம் ஆகியவற்றுக்கு தொண்டர்களை ஏற்றி வரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் தற்காலிக அல்லது சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள் ஆகியவை நெல்லை மாவட்ட வருவாய் எல்லைக்குள் இன்று காலை 8 மணி முதல் செப் 2ம்தேதி காலை 6 வரை நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் 144 பிரிவு 1இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட எ்ல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.