இந்த விஷயம் கூட தெரியாத முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார்.. மு.க.ஸ்டாலின் கிண்டல்
Recommended Video
சென்னை: 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது கூட தெரியாத ஒரு முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இன்று காலை நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதன்பிறகு விழாவில் அவர் பேசியதாவது:
நாங்கள் சிறைக்கு செல்ல அஞ்சாதவர்கள். ஆனால் ஊழல் செய்து சிறைக்கு போகுபவர்கள் இல்லை. அதுபோன்ற சிறையை நாங்கள் விரும்ப மாட்டோம். ஊழல் செய்து, பெங்களூர் சிறையில் உள்ளவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். விரைவில் இன்னும் பலரும் சிறைக்கு போகப்போகிறார்கள்.
144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது தெரியாமல் தமிழ்நாட்டு முதல்வர் உள்ளார். இந்த அடிப்படை கூட தெரியாத ஒரு முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார். திமுக நடத்துவது நாடகம் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், அதிமுக நடத்துவது கபட நாடகம்.
மிசா சட்டத்தையே திமுகவினர் எதிர்கொண்டவர்கள். வழக்குகளை கண்டு எங்களுக்கு கவலையில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியின்போது, 144 தடை உத்தரவு இருப்பதால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்ற, தூத்துக்குடிக்கு நாங்கள் போகவில்லை என்று தெரிவித்தார்.