15 திமுக எம்எல்ஏக்கள் எங்க பக்கம் தவ்வப் போறாங்க.. திருவொற்றியூர் கூட்டத்தில் அள்ளி விட்ட தினகரன்!
திமுக எம்எல்ஏக்கள் 15 பேர் அதிமுகவில் இணைய உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக எம்எல்ஏக்கள் 15பேர் அதிமுகவில் இணைய உள்ளதாக அள்ளிவிட்டுள்ளார் டிடிவி தினகரன். ஆர்கே.நகர் தொகுதி தேர்தலுக்கு பின் ஓபிஎஸ் அணி காணாமல் போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவில் நியமிக்கப்பட்ட டிடிவி.தினகரன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என்றார். திமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் தங்களது தலைமையிலான அதிமுகவில் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி காணாமல் போய்விடும் என்று தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஒன்றாக வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தினகரன் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறந்த நடிகராக விளங்குகிறார். அவர் அதிமுகவை அழிக்க நினைப்பது வருத்தம் அளிக்கிறது என்றம் டிடிவி.தினகரன் கூறினார்.