போலீசாருக்கு அதி நவீன 150 சிசி பைக்.... தொடக்க விழாவிலேயே ஸ்டார்ட் ஆகாத 10 பைக்குகள்!
நெல்லை: நெல்லையில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் போலீசாருக்கு அதி நவீன பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பத்து பைக்குகள் தொடக்க விழ ாவிலேயே ஸ்டார்ட் ஆகாமல் பல்லைக் காட்டி தர்மசங்கடப்படுத்தின.
தமிழகத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் காவல் துறையினருக்கு அதி நவீன பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் 9 சப் டிவிஷனுக்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு 47 பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு சப் டிவிஷனுககு தலா 5 பைக்குகள் வீதம் 45 பைக்ககுளும், கூடுதலாக 2 பைக்குகளும் வழங்கப்பட்டுள்ளது. 9 சப் டிவிஷன் காவல் நிலையங்களுக்கான பைக் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. எஸ்பி விக்ரமன் கொடியசைத்து பைக்ககுளை வழியனுப்பி வைத்தார்.
பின்னர் எஸ்பி விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குற்றங்களை தடுக்கவும், திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தெரிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குற்றவாளிகளை பிடிக்கவும் காவல் துறைக்கு 150 சிசி இன்ஜின் பொருந்திய நவீன பைக்குகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சப் டிவிஷனுக்கு 47 பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
போலீசார் இரண்டு ஷிப்டுகளாக இந்த பைக்குகளில் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு அவசர தகவல் வந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வர். இதன் மூலம் குற்ற செயல் நடைபெறுவது தடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக எஸ்பி விக்ரமன் கொடியசைத்த போது பைக்குகள் புறப்பட தயாராக இருந்தன. அப்போது சுமார் 10 பைக்ககள் என்ஜின் கோளாறு, பெட்ரோல் இல்லாதது போன்ற காரணங்களால் இயங்க மறுத்தன. கிக் ஸ்டாரை அடித்து பார்த்தும் பைக்குகள் கிளம்பாததால் போலீசார் சோர்ந்து விட்டனர். பின்னர் ஒரு வழியாக கோளாறு சரி செய்யப்பட்டு அவை அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications