தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: உள்துறை செயலர் உத்தரவு
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 12 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை: 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உயர் போலீஸ் அதிகாரிகளாக பணிபுரிந்து வரும், 2003 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரிகளான அமித்குமார் சிங், அஸ்வின் கோட்னிஸ், பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், சுதாகர் ஆகிய 5 பேர் டி.ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதேபோன்று 2004 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஏ.கே. செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில் குமாரி, துரை குமார், மகேஸ்வரி, ஆசியாம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி , ஜெயகவுரி, காமினி ஆகிய 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் எஸ்.பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.