For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இறுதி வாதம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

18 MLA Disqualification: Madras High Court adjourns hearing to Aug 31

முதலில் வந்த தீர்ப்பில் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் வேறு வேறு தீர்ப்பை வழங்கினார்கள். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவிடம் சென்றது. தற்போது அவர் வழக்கை விசாரித்து வருகிறார்.

இதுவரை அரசு தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் எல்லாம் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் வாதிட்டு வருகிறார். அவர் இன்று தன்னுடைய வாதத்தை முடிக்க வேண்டி இருந்தது.

ஆனால் முக்கிய காரணங்களால் அவர் வாதத்தை முடிக்க முடியவில்லை. இதனால் தற்போது வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதியோடு அனைத்து வாதங்களும் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
18 MLA Disqualification: Madras High Court adjourns hearing to Aug 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X