For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பியது தமிழக அரசு.. இன்னும் ''சில'' மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வெவ்வேறு தீர்ப்பு வந்து இருப்பதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை தமிழக அரசுக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு...வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வெவ்வேறு தீர்ப்பு வந்து இருப்பதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை தமிழக அரசுக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.

    மூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பை பொறுத்தே ஆட்சி மாற்றம், ஆட்சி தொடர்ச்சி எல்லாம் முடிவாகும். தமிழக அரசியலில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.

    அரசை ஆட்டிப்படைக்க போகும் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒன்றுக்கு பதில் இரண்டு தீர்ப்பு வெளியாகி உள்ளது. இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியாகி உள்ளது.

    மூன்றாவது நீதிபதி

    மூன்றாவது நீதிபதி

    தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று தலைமை வழக்கறிஞர் இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஒரு வருடமாக ஆட்சி

    ஒரு வருடமாக ஆட்சி

    இந்த நிலையில் திடீர் என்று ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி வழக்கு நடக்கும் போதே, ஒரு வருட ஆட்சியை முடித்துள்ளார். சரியாக தீர்ப்பு மட்டுமே 5 மாதம் கழித்துதான் அளிக்கப்பட்டது. நீதிபதி இந்திரா பானர்ஜி 2 நிமிடமும், நீதிபதி சுந்தர் 3 நிமிடமும் வாசித்த இந்த தீர்ப்பிற்காகதான் தமிழகம் 5 மாதம் காத்திருந்தது.

    தேர்தல் இல்லை

    தேர்தல் இல்லை

    இந்த தீர்ப்பில் மிக முக்கியமாக, மூன்றாவது நீதிபதி தீர்ப்பளிக்கும் வரை, தேர்தலை நடத்த கூடாது என்று கூறியுள்ளனர். அதனால், மூன்றாவது நீதிபதியின் கருத்து இதில் முக்கியமாகிறது. இந்த தகுதி நீக்கம் செல்லுமா, செல்லாதா என்று அவர்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரை வழக்கு மீண்டும் காத்திருக்கும்.

    எத்தனை மாதம்

    எத்தனை மாதம்

    அதேபோல், இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதி யார் என்று இன்னும் கூறப்படவில்லை. இதனால் அவரை நியமிக்க இன்னும் இரண்டு வார காலமாவது ஆகும். அதன்பின் அவர் வழக்கின் வாதங்களை பார்வையிட்டு தீர்ப்பை வழங்க இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம். இதனால் இன்னும் சில மாதங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை.

    English summary
    18 MLA Disqualification Verdict: BIG relief for OPS and EPS team, TTV has to wait more.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X