For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயங்கரம்.. காலங்காத்தாலே.. கோயில் வாசலில் கிடந்த "மனித" தலை.. அலறிப்போன தஞ்சை..!

தஞ்சையில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: விடிகாலையில், கோயில் வாசலில் மனித தலை விழுந்து கிடந்ததை பார்த்ததுமே தஞ்சாவூரே இன்று அலறிப்போய்விட்டது,

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் மணி.. 19 வயசுதான் ஆகிறது.. ஆனால், இவர் ஒரு கிரிமினல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஏகப்பட்ட கேஸ்கள் இவர்மீது உள்ளன.!

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பக்கம் இருக்கும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.

"சபலிஸ்ட்".. மொத்தம் 500 பெண்கள்.. தினமும் 2 பெண்கள்.. போலீசாரையே மிரள வைத்த கிராதகன்!

 தண்டவாளம்

தண்டவாளம்

அப்போது அவரை 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்தனர்.. அவரை தரதரவென ரெட்டிப்பாளையம் புது ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு இழுத்து சென்றனர்.. அந்த இடத்தில் 5 பேரும் மணியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.. இதில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார் மணி.

கொலை

கொலை

ஆனால், அந்த கும்பலுக்கு ஆத்திரம் அடங்காத நிலையில், மணியின் தலையை தனியாக வெட்டி எடுத்தனர்.. உடலை மட்டும் தண்டவாளத்திற்கு நடுவே தூக்கி போட்டுவிட்டு, தலையை கையில் எடுத்துக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றனர்.. மணியின் வீட்டருகே இருக்கும் அம்மன் கோயில் வாசலில், அந்த தலையை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.. இன்று விடிகாலை அந்த பக்கமாக சென்றவர்கள், வாசலில் தலை இருப்பதை கண்டு அலறி அடித்து கொண்டு ஓடினர்.

தலை

தலை

உடனடியாக போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. இதையடுத்து, தண்டவாளம் பகுதிக்கு சென்று உடலையும் கைப்பற்றினர்.. விசாரணையும் ஆரம்பமானது.. கொலை செய்யப்பட்ட மணிக்கு ஏற்கனவே அந்த பகுதியில் முத்துராமன் என்பவருடன் விரோதம் இருந்து வந்துள்ளது.. முத்துராமனுக்கு வேண்டப்பட்டவரை கொன்றதாக மணி மீது புகார் இருக்கிறது..

 விசாரணை

விசாரணை

இது சம்பந்தமாக ஏற்கனவே மணி ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார்.. இந்த பிரச்சனையால்தான் மணியை இப்போது கொன்று பழிதீர்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. ஆனால் அந்த 5 பேர் யார் என்று தெரியவில்லை.. அவர்களை தேடும் பணி ஒரு பக்கம் நடக்கிறது.. இதில் சந்தேகத்திற்கிடமான, 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள் போலீசார்.. தேர்தல் சமயத்தில், இப்படி ஒரு கொடூர கொலை சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

English summary
19 year old youth murdered near Tanjore due to prejudice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X