திருநின்றவூரில் 19வது மாவட்ட செஸ் போட்டி...
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 19வது மாவட்ட குழுக்களுக்கான ஓபன் தேர்வு மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெறவுள்ளது.
ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இப்போட்டி நடைபெறும். திருநின்றவூர் டன்லப் நகர், வேப்பம்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இப்போட்டி நடைபெறும். இந்த இடம் வேப்பம்பட்டு பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தலா ரூ. 100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் தலா ரூ. 50 மட்டுமே.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ. 3500 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இந்தப் போட்டித் தொடரில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், இந்தப் போட்டியில் பங்கேற்போர் மட்டுமே 22வது தமிழ்நாடு மாநில பைட் ரேட்டட் அணி மற்றும் 16வது பிளிட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்க முடியும். இந்தத் தொடர் ஈரோடு மாவட்ட செஸ் சங்கத்தால் பிப்ரவரி 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு இணைச் செயலாளர் கே.சிராஜுதீன் (9444785685), கெளரவச் செயலாளர் எஸ்.பலராமன் (9444751432), துணைத் தலைவர் இளங்குமார் (9884854008) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரம் அறிய கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்.