For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூரில் காவிரியில் மூழ்கி ஈரோட்டை சேர்ந்த 2 சிறுவர்கள் பலி

Google Oneindia Tamil News

ஈரோடு மாவட்டம் பெரியகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி. செல்வராஜ். இருவரும் கூலித் தொழிலாளிகள். 2 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் என்ற இடத்தில் காவிரியாற்றின் கரையில் உள்ள புளியமரத்தடி கருப்பண்ணசாமி கோயிலுக்கு சாமி கும்பிட வந்தனர்.

இரு குடும்பத்தினரும் காவிரி ஆற்றில் குளித்தபோது, பழனிச்சாமியின் 4-வது படிக்கும் மகன் சந்திரஹரி, செல்வராஜின் 5-வது படிக்கும் தினேஷ்குமார் ஆகியோர் ஆற்று நீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கினர்

2 boys drowned in Cauvery river

சிறுவர்களது குரலைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனின்றி இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்த அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸார் சிறுவர்களது உடலை மீட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

English summary
2 boys were drowned in Cauvery river near Karur. They were from Erode, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X