For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் இரண்டு மாடி வீடு கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டுபோடு அருகில்
இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர் 7 பேர் படுகாயங்களுடன்
மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீரங்கம் மேல உத்தரவீதியில் 2 மாடி கட்டட கட்டுமான பணி நடந்துகொண்டிருந்தது. கட்டடத்திற்கு அஸ்திவாரம் தோண்டும் போடு அருகில் இருந்த வீட்டின் சுவர் மளமளவென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் அப்படியே மண்ணிற்குள் புதைந்தனர்.

2 dead 7 injured wall collapse in Srirangam

உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணியில் ஈடுபட்டனர். மண்ணில் புதையண்ட தொழிலாளர்களில் 4 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 7 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
At least Two workers were killed and 7 injured after the wall of an under-construction collapsed in Srirangam, Tiruchi district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X