சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. இருவர் பலி, இருவர் படுகாயம்
சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
சென்னை வில்லிவாக்கம் ஜிகேஎம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.இவர் வடபழனியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் மேலாளராக உள்ளார்.
இவரது மனைவி அனுசியா மற்றும் அவரது இரு மகள்கள் தனுஸ்ரீ,சஞ்ஜு ஆகிய மூவருடன் பாடியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு பொருட்களை வாங்கி கொண்டு நான்கு பேரும் பாடி வழியாக சென்றுள்ளனர்.
பாடி மேம்பாலத்தில் ஏறும் போது அவ்வழியாக பின்னால் வந்த கண்டைனர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மகள் தனுஸ்ரீ மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தின் மனைவி அனுசியா மற்றொரு மகள் சஞ்ஜு ஆகிய இருவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.