For Daily Alerts
Just In
விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் மீது சுவர் விழுந்ததில் 2 குழந்தைகள் பலி.. நுங்கம்பாக்கத்தில் சோகம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலை ஓரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் மீது சுவர் விழுந்ததில் 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலை ஓரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் மீது சுவர் விழுந்ததில் 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
நுங்கம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மாலை பள்ளி முடித்துவிட்டு வந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்த போது அவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது.
நேற்று பெய்த மழை காரணமாக சுவரில் விரிசல் ஏற்பட்டு இன்று விழுந்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர் .
தலையில் காயம் பட்டதால் அவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சிறுமிகள் தயான் (8), முஸ்கான் (4) பலி ஆகியோர் பலியானதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
Comments
English summary
2 gilrs died after Roof fall on them in Nungampakkam Chennai . Their body has taken to hospital for examination.