For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் பலி - ரூ.3 லட்சம் அரசு நிவாரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். அடையாறில் அரசு உதவி பெறும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். சுவர் இடிந்ததில் மேலும் ஒரு மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ. 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

அவ்வை இல்லம் அறக்கட்டளைக்கு சொந்தமான டிவிஆர் பெண்கள் பள்ளியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் பயன்பாடின்றி இருந்த பாழடைந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பெசன்ட்நகர் ஊரூர் குப்பத்தை சேர்ந்த மாணவிகள் மோனிஷா, நந்தினி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மாணவி சந்தியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அடையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து நடந்தது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரூ.3 லட்சம் நிவாரணம்

இதனிடையே பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவிகள் இருவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

English summary
2 eight standard Students had died after a wall in Adayar school collapsed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X