For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டுப்பாளையம் அருகே கார்கள் மோதி விபத்து: தாய்-மகள் பலி.. 5 பேர் படுகாயம்

இரு கார்கள் மோதிய விபத்தில் தாய்-மகள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

Google Oneindia Tamil News

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், தாய்-மகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை வெள்ளமடையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் இன்று தனது மனைவி சந்திரப்ரியா 36, மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரட்டை பெண் குழந்தைகளுடன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

2 kills in Road Accident Near Mettupalayam

சத்தியமங்கலம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்புறத்தில் ஆம்னி கார் ஒன்று எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்களும் வனபத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்ததாக தெரிகிறது.

இதில் எதிர்பாராதவிதமாக இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் சந்திரப்பிரியா மற்றும் மகள் ஆஷித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
In the accident, mother and daughter were killed when two cars collided near Mettupalayam. Five more were admitted to Mettupalayam Government Hospital. When Venkatesh went to the temple with his family and returned to the car, the ammunition hit the Omani car. Venkatesh's wife-daughter died on the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X