For Daily Alerts
Just In
நாமக்கல்லில் பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிப்பு.. மர்ம நபர்கள் கைவரிசை
நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் விஏஓவாக இருக்கிறார் விமலா. இவர் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த சம்பவம் நடநதுள்ளது.
அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் விமலாவின் கழுத்தில் இருந்த நகையை பறித்துள்ளார்கள். இதன் மொத்த மதிப்பு 5 சவரன் ஆகும்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் விமலா கூறிய அடையாளங்களை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறது.
Comments
English summary
2 men robbers 5 pound gold from VAO officer named Vimala in Namakkal.
Story first published: Friday, February 16, 2018, 20:28 [IST]