For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை சிறையில் விசாரணை கைதி கல்லால் அடித்து கொன்ற விவகாரம் : 2 வார்டன்கள் அதிரடி சஸ்பெண்ட்

கோவை சிறைத்துறை வார்டன்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை சிறையில் கைதிகள் இடையே பயங்கர மோதல்-வீடியோ

    கோவை: கோவை சிறையில் விசாரணை கைதி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 வார்டன்கள் அதிரடியாக செய்யப்பட்டுள்ளனர்.

    பீளமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், அடிதடி வழக்கில் கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல அடிதடி வழக்கில் விஜய் என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைதாகி இதே சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். இருவருமே கோவை சிறையில் உள்ள மருத்துவரிடம் மனநல ஆலோசனை பெற்று வந்தனர்.

    2 prison Wardens are suspended in Kovai

    இந்நிலையில் நேற்று மதியம் உணவு உண்ணும்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக உருவெடுத்தது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் பலமாக தாக்கி கொண்டனர். இதில் கைதி விஜய், ரமேஷை கல்லால் பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிறை வளாகத்துக்குள் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லாலேயே ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இந்நிலையில், விசாரணை கைதி கொலை தொடர்பாக 2 வார்டன்கள் தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கல்லால் அடித்து கொன்ற கைதி விஜய்யிடம் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Two wardens have been suspended in connection with the killing of a prisoner in a prison in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X