பொள்ளாச்சி அகதிகள் முகாமில் இருந்து 2 பெண்கள் இலங்கைக்கு தப்பினர் - 5 பேர் கைது
பொள்ளாச்சி அகதிகள் முகாமில் தங்கியிருந்த 2 பெண்கள் படகு மூலம் இலங்கைக்கு தப்பித்தனர். அவர்கள் தப்பிக்க உதவியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: பொள்ளாச்சி அகதிகள் முகாமில் இருந்த இரண்டு பெண்களை பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதி வழியாக இலங்கைக்கு சென்றனர். இவர்கள் படகு மூலம் இலங்கைக்கு தப்பிக்க உதவியதாக ரமணன், நெமிரோன், விக்னேஷ், பிராங்பட், விஜயகுமார் உட்பட 5 பேரை கைது செய்து பாம்பன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் அருகே மலையாண்டிபட்டினத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது இங்கிருந்து இராமநாதப்புரம் பாம்பன் கடல் வழியாக சட்டவிரோதமாக 24 வயதுடைய பெண் ஒருவரையும் அவரது சிறிய மகளையும் இலங்கைக்கு தப்பவைத்துள்ளனர்.
அகதிகள் முகாமில் இருந்து படகு மூலம் தாயையும் மகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கிடைத்த, தகவலின் அடிப்படையில் ரமணன், நெமிரோன், விக்னேஷ், பிராங்பட், விஜயகுமார் உட்பட 5 பேரை கைது செய்து பாம்பன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை திரும்பிய பெண்ணின் உறவினர் ஒருவர் பொள்ளாச்சி அகதிகள் முகாமில் தகவல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.