For Daily Alerts
Just In
மே 7ம் தேதி +2, மே 21ல் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது... !
சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார்.
இரு தேர்வு முடிவுகளும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் மட்டுமே காண முடியும். அதன்படி கீழ்க்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து மதிப்பெண் பட்டியலையும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.
இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
English summary
+2 results will be released on May 7 and SSLC results will be announced on May 21, the govt announced today.
Story first published: Thursday, April 23, 2015, 19:51 [IST]