For Daily Alerts
Just In
குடும்ப பிரச்சனையால் 2 பேர் கழுத்தறுத்து கொலை... விருதுநகரில் கொடூரம்!
விருதுநகரில் குடும்பப் பிரச்சனையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விருதுநகர்: விருதுநகரில் குடும்பப் பிரச்சனையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விருதுநகரில் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியில் வசித்து வந்த முத்துலட்சுமி, முனீஸ்வரன் ஆகியோர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களை கொலை செய்த தந்தை, தற்போது தலைமறைவாகி இருக்கிறார். போலீஸ் இவரை தேடி வருகின்றனர்.
கடன் தொல்லை காரணமாக ஏற்பட்ட சண்டையை அடுத்து இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொலைக்கு உண்மையான காரணத்தை போலீஸ், சிறுவர்களின் உறவினர்களிடம் விசாரித்து வருகிறது.
English summary
2 school students named Muthulakshmi and Munishwaran killed by their father in Virudhunagar. Police are currently searching their father.
Story first published: Sunday, April 22, 2018, 8:00 [IST]