For Daily Alerts
Just In
தூத்துக்குடி அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது
தூத்துக்குடியில் அரசுப்பேருந்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி : தூத்துக்குடி: பேருந்து ஒன்றில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு கத்திக் குத்து விழுந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, சிலர் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதில், பதுகாயமடைந்த மாணவர்கள் இரண்டு பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் கத்தி குத்து சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
Students clash in government bus, 2 injured, 4 Students have been arrested for aggravated assault with a deadly weapon in Thoothukudi.
Story first published: Friday, December 2, 2016, 11:24 [IST]