குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்.. கைதான இரு வட்டாட்சியர்கள் விடுவிப்பு
சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்ட இரு வட்டாட்சியர்களுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பில்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள், அதிகாரிகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார். ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 10 பேர் ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது போல் மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.
TNPSC: வயசு 46.. ஆடு மேய்ப்பவர்.. எப்படி திருவராஜ் இப்படி பாஸ் பண்ணீங்க.. அதிர்ச்சியில் சிபிசிஐடி
இவர் குரூப் 4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக தெரிகிறது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே வீரராஜ், பார்த்தசாரதி ஆகிய 2 வட்டாட்சியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
குரூப் 4 தரவரிசையில் 100 இடங்களுக்குள் வந்த 39 பேரில் சிலர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக இருந்த தாசில்தார்கள் பார்த்த சாரதி, வீரராஜ் இருவரிடம் துருவி துருவி விசாரணை நடத்திய பின், முறைகேட்டில் தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து இருவரையும் சிபிசிஐடி போலீசார் விடுவித்தனர்.