For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபலம்... தங்க செயினை திருநங்கைகளிடம் இழந்த வாலிபர்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் வாலிபரை விபசாரத்துக்கு அழைத்துச்சென்று நகைபறித்த திருநங்கைகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த பாண்டியன். இவர் தனது தங்கைக்கு தேவையான புத்தகங்கள் வாங்க கோவை வந்துள்ளார். பின்னர் அவர் கடந்த 3 ஆம் தேதி இரவில் கோவை வ.உ.சி. பூங்கா அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் அந்த வாலிபரிடம் தன்னிடம் 2 அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

சபலத்தால் வந்த வினை:

அதில் சபலமடைந்த வாலிபர் காரில் ஏறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஒரு மறைவான இடத்தில் கார் நின்றது. அங்கு 2 பேர் நின்றிருந்தனர். அருகே சென்றபோது அவர்கள் திருநங்கைகள் என்பது தெரியவந்தது.

நகை பறிப்பு:

இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் அங்கிருந்து தப்ப முயன்றார். உடனே அந்த திருநங்கைகள் அந்த வாலிபரை பிடித்து அவருடைய கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு காரில் தப்பிச்சென்றனர்.

டிரைவர் கைது:

இந்த நூதன நகை கொள்ளை குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரகுபதி என்பவரை கைது செய்தனர்.

திருநங்கைகளும் கைது:

தப்பி ஓடிய திருநங்கைகள் 2 பேரையும் தேடி வந்தனர்.இந்நிலையில் காந்திபுரம் பஸ்நிலைய பகுதியில் சுற்றிதிரிந்த அவர்கள் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மும்தாஜ் மற்றும் இளவஞ்சி ஆகிய 2 திருநங்கைகளும் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்.

நகை மீட்பு:

இவர்களிடம் இருந்து 3½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸ்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.

தகாத வார்த்தைகள்:

அப்போது, திருநங்கைகள் 2 பேரும் கேவலமாக நடந்துகொண்டதுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்தவர்களை தகாதவார்த்தைகளால் திட்டினர். கைதான 2 பேரும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிந்திப்பீர்களா? :

சமூகத்தில் கவுரமாக வாழ நினைக்கும் பல திருநங்கைகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட சிலரால்தான் அவர்களுடைய உரிமை இன்னும் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

English summary
2 Transgender people from Coimbatore cheated a young man and theft 3 ½ pound gold chain. Police arrested them and filed case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X