சண்டே ஸ்பெஷலாம்... ஆட்டுக் கறியுடன் நாய் கறி கலந்து பிரியாணி.. ஆம்பூரில் இருவர் கைது
ஆட்டுக் கறியுடன் நாய் கறியை கலப்படம் செய்து பிரியாணி தயாரித்த ஆம்பூர்வாசிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூர்: சண்டே ஸ்பெஷல் என்று கூறி ஆட்டுக் கறியுடன் நாய் கறியை கலந்து பிரியாணி செய்தது தெரியவந்ததை அடுத்து ஆம்பூரில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூர் பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். திண்டுக்கல் பிரியாணி, ஆற்காடு பிரியாணியை போல் ஆம்பூர் பிரியாணியும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.
அவ்வழியாக பணி நிமித்தமாக செல்வோர் ஆம்பூரிலோ அல்லது வாணியம்பாடியிலோ பிரியாணியை சுவைப்பது வழக்கம். இந்த பிரியாணியில் சண்டே ஸ்பெஷல் என கூறிக் கொண்டு புது வகை பிரியாணி என்ற ஒன்றை ஆம்பூரில் ஒரு சிறிய கடையில் போட்டுள்ளனர்.
அப்போது அந்த பிரியாணியில் ஆட்டுக் கறியுடன் வேறு ஏதோ கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இருவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான சம்பவத்தை தெரிவித்தனர்.
ஆட்டுக்கறியின் விலை உயர்வால் அந்த கறியுடன் நாய் கறியையும் சேர்த்து சமைத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.