For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிபோதையில் 82 வயது பாட்டியிடம் அத்துமீறிய வாலிபர்... சுற்றி வளைத்து தர்ம அடி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த 82 வயது பாட்டியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக வெளுத்தெடுத்தனர். பின்னர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை கொருக்குபேட்டை மீனம்மாள் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சாரதாம்பாள் (82). இவர் தனது மகன் மகாலிங்கத்துடன் வசித்து வருகிறார். நேர்று இரவு மகாலிங்கம் வேலைக்குப் போய் விட்டார். வீட்டில் சாரதாம்பாள் மட்டும் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நள்ளிரவில் ஒரு இளைஞர் குடிபோதையில் அங்கு வந்துள்ளார்.

24 year old youth arrested for molesting 82 year old woman

வீட்டுக்குள் புகுந்து சாரதாம்பாளிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டார். இதைப் பார்த்து அலறினார் சாரதாம்பாள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த குடிகார நபரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அதே கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சரவணன் என்று தெரிய வந்தது. இந்த சரவணனுக்கு வயது 24தான்.

இவரிடம் சிக்கி மீண்ட பாட்டிக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
Chennai police has arrested a 24 year old youth for molesting 82 year old woman at Korukkupettai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X