நீலகிரியில் சீல் வைக்கப்படும் 27 ரிசார்ட்டுகள் இதோ இவைதான்!
முறையின்றி கட்டப்பட்ட 27 கட்டிங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
ஊட்டி: யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு சீல் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா களத்தில் இறங்கிவிட்டார். முறைகேடாக கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்களுக்கும் இன்று நேரில் சென்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டன. அந்த ரிசார்ட்கள் இவைகள்தான்.
- எக்கோ கேம்ப் - மசினகுடி
- ஜெனிபர் பிரசில்லா - மசினகுடி
- நிஜாமுதீன் - பொக்காபுரம்
- நார்த்தன் ஹே எஸ்டேட் - மசினகுடி
- தி வைல்ட் சவுத்ஸ்வீக் காட்டேஜ் - ஊட்டி
- வெஸ்டர்ன் பார்ம் ரிசார்ட்ஸ் - மசினகுடி
- சஜித்கான் - மசினகுடி
- ஹார்ன்பில் கிளாக் - பொக்காபுரம்
- மூவ்ட் மிஸ்ட் - பொக்காபுரம்
- ஆலிவ் வியூ ரிசார்ட் - பொக்காபுரம்
- ரோலிங் ஸ்டோன் - மசினகுடி
- ஜங்கிள் ரீட்ரீட் - பொக்காபுரம்
- மொனார்க் சஃபாரி பார்க் - சோலூர்
- ஜங்கிள் ஹட் - பொக்காபுரம்
- பாரஸ்ட் ஹில் பார்ம் - பொக்காபுரம்
- பெல்மவுண்ட் ரீட்ரீட் - சோலூர்
- சஃபாரி லேண்ட் - சோலூர்
- மவுண்ட் வியூ பார்ம் - பொக்காபுரம்
- கிங்ஸ் ரேஞ்ச் ரிசார்ட் - மசினகுடி
- தீனதயாள் ரிசார்ட் - கடநாடு
- பியர் மவுன்டெயின் - பொக்காபுரம்
- இன்-திவைல்ட் - மசினகுடி
- ப்ளு வேலி - பொக்காபுரம்
- க்ளாண்டைன் பாரடைஸ் - கல்லட்டி
- அவிலாஞ்சி ப்ரிஸ்ட்டியூவ் ரிசார்ட் - பொக்காபுரம்
- வெஸ்லி வுட் எஸ்டேட் - மசினகுடி
நீலகிரியில் சீல் வைக்கப்படும் 27 ரிசார்ட்டுகள் இதோ இவைதான்! pic.twitter.com/Y4aRQZOg8r
— Oneindia Tamil (@thatsTamil) August 10, 2018
இந்த ரிசார்ட்களின் உரிமையாளர்கள் இவைகளை கட்டுவதற்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள், எப்படி இவ்வளவு தைரியமாக இவ்வளவு காலம் செயல்பட்டார்கள் என தெரியவில்லை. இதற்கெல்லாம் விளக்கம் கேட்டுதான் உச்சநீதிமன்றம் இப்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. யானைகள் நடமாட கூடிய இடங்களில் காட்டேஜ்களை கட்டி வைத்து கொண்டு, யானைகள் அங்கு வந்து இவர்களுக்கு எந்த இடைஞ்சலும் தந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த ஜீவன்களுக்கு மின்வேலிகளை அமைத்து கொண்டு இவ்வளவு நாள் இவர்கள் தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர்.
இப்போது உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கையிலெடுக்கவும் அனைவரும் மிரண்டு கிடக்கிறார்கள். அது மட்டும் இல்லை. இந்த 27 ரிசார்ட்கள் தவிர மேலும் 12 ரிசார்ட்கள் மீதும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க போகிறார். இன்னும் 2 நாளில் அந்த அதிரடியும் தொடர உள்ளது. வனவிலங்குகளை மதிக்காதவர்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான சாட்டையை கையில் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதே!