For Daily Alerts
Just In
9 மாநிலங்கள்.. 27 படுகொலைகள்.. பதை பதைக்க வைக்கும் கொடூரம்!
Recommended Video
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வாட்ஸ் அப் வதந்தி- வீடியோ
சென்னை: வாட்ஸ் ஆப் மூலம் பரவும் வதந்திகளால் நடைபெறும் கொடூரக் கொலைகள் அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 9 மாநிலங்களில் 27 பேர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் பிள்ளை பிடிக்கும் கும்பல் என்று பரவிய வதந்திக்குப் பலியானவர்கள்.
9 மாநிலங்கள்.. 27 படுகொலைகள்.. பதை பதைக்க வைக்கும் கொடூரம்!https://t.co/rwaEYmLXiy pic.twitter.com/mgatuC7SaS
— Oneindia Tamil (@thatsTamil) July 7, 2018
தமிழகம் முதல் ஜார்க்கண்ட் வரை 9 மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்த ஒரு ரவுண்டப்:
- மகாராஷ்டிராவில் ஜூன் 8ம் தேதி சந்த்கான் பகுதியில் 2 பேரும், கோரேகானில் ஜூன் 11ல் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
- ஒளரங்காபாத்தில் ஜூன் 15ம் தேதி ஒருவரும், துலேவில் ஜூலை 1ம் தேதி 5 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
- தெலுங்கானா மாநிலத்தில் மே 23ம் தேதி நல்கொண்டா மாவட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- கர்நாடகத்தில் மே 23ம் தேதி பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
- தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அதிமூரில் ஒருவரை கும்பல் ஒன்றுஅடித்துக் கொன்றது.
- சட்டிஸ்கரில் ஜூன் 22ல் ஒருவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2017, மே 18ம் தேதி 3 பேரும் அடித்துக் கொல்லப்பட்டனர்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில்2017 மே 19ம் தேதி சோபாபூரில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
- மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ஜூன் 13ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டனர்.
- கிழக்கு மித்னாப்பூரில் ஜூன் 23ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டார்.
- அஸ்ஸாமில் கர்பி அங்கலாங் பகுதியில் 2 பேர் ஜூன் 8ம் தேதி கொல்லப்பட்டனர்.
- திரிபுராவில் மோகன்பூர் மாவட்டத்தில் ஜூன் 28ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டார்.
- அதே தினத்தில் தெற்கு திரிபுராவில் ஒருவரும், செபாஜியாலா பகுதியில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
Comments
English summary
27 persons have been beaten to death in one year in 9 states and the incidents have happened due to the Whats app rumour.