For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தருமபுரி அருகே கமிஷனுக்கு பழைய ரூபாய் நோட்டு மாற்றும் கும்பல் கைது

தருமபுரி அருகே கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றி தருவதாக மூன்றே பேரை போலீசார் கைது செய்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

தருமபுரி: தருமபுரி அருகே கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதனிடையே கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் வேறொரு ஆட்கள் மூலம் கமிஷன் அடிப்பைடையில் மாற்றி வருகின்றனர். இதனை காவல்துறையினர், வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

3 arrested with Rs 20.60 lakhs in old notes

இந்நிலையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காரிமங்கலத்தில் ஒரு கும்பல கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார் கமிஷன் அடிப்படையில் ரூ.20.60 லட்சத்தை மாற்ற முயன்ற மதி, செல்வக்குமார், பிரவு ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

English summary
Three arrested for allegedly trying to change new notes and collect old ones on commission basis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X