For Daily Alerts
Just In
பால் பவுடர் டப்பாவில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்- சுங்கத்துறை பறிமுதல்!
சென்னை: சென்னையிலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த போதைப்பொருள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து மலேசியா செல்ல இன்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயார் நிலையில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸில் பெரிய அளவில் போதப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தேகிக்கும்படியிருந்த ஒரு பெண் பயணியை பிடித்து விசாரணை செய்தனர். சோதனையில் அந்த பெண் 6 பால் பவுடர் டின்னில் 3 கிலோ போதைப்பொருள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூபாய் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
English summary
rupees 3 crores worth drug confiscated from customs officials today.
Story first published: Thursday, October 22, 2015, 15:26 [IST]