For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆண்டிப்பட்டியில் சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாப பலி
தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சாலை விபத்து ஒன்றில் மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மி நாயக்கன்பட்டியி்ல் இருந்து பைக் ஒன்றில் அசோக்குமார், ஆனந்தராஜ், கார்த்திக் ஆகிய மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரமாக லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக இளைஞர்கள் வந்த பைக் லாரியின் மீது மோதியது. இதனையடுத்து பைக் தூக்கியடிக்கப்பட்டு இளைஞர்கள் மூவரும் சாலையில் விழுந்துள்ளனர். இதனையடுத்து அவர்களுடைய தலை உள்ளிட்ட இடங்களில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கி மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
unexpectedly, 3 people died for an accident in Andippatti, police filed case.
Story first published: Friday, October 2, 2015, 9:44 [IST]