For Daily Alerts
Just In
வேதாரண்யம் அருகே விபரீதம்... காணும் பொங்கல் குளியலின்போது 5 பேர் கடலில் மூழ்கி பலி!
காணும் பொங்கலை முன்னிட்டு வேதாரண்யம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் காணும் பொங்கலை கொண்டாட வந்த இளைஞர்கள் கடலில் குளிக்கச் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 5 பேர் இறந்துள்ளனர்.
காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் நடுக்கடலில் குளிப்பதற்காக 19 இளைஞர்கள் ஃபைபர் படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
நடுக்கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பரத், யுவராஜ், பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English summary
3 died near vedaranyam while swimming at deep sea ahead of Kanum Pongal celebration, 2 found missing and one hospitalised in criticcal ccondition at Thiruvarur government hospital.