For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேரன்மகாதேவி அருகே... சமையல் செய்து கொண்டு இருந்த மூவர் இடி தாக்கி பலி

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சமையல் செய்து கொண்டிருந்த மூன்று பேர் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேரன்மாதேவி அருகே உள்ள மேலகுனியுர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இசக்கி(31), விஜி (19),முருகன்26). இவர்கள் 3 பேர் மற்றும் 12க்கும் மேற்ப்பட்டோர் பிற்பகல் அக்கிராமத்தில் ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலத்தில்கூலி வேலை செய்துவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தனர்.

3 died of thunder attack

அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இதனால்சமையல் செய்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்த மரங்களின் கீழ் ஒதுங்கினர். அப்போது திடீரென மரத்தின் மீது இடி விழுந்ததில் இசக்கி(31), விஜி (19),முருகன் (26) உள்பட 3 பேரும் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சேரன்மகாதேவி காவல்நிலைய போலீசார் மற்றும்வருவாய்த்துறை அதிகாரிகள்சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஒருவருக்கு காயமும் 12 பேருக்கு செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

English summary
3 coolie workers died of thunder attack near Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X