ரூ. 2500க்கு மசாஜ் + மஜா.. 3 அழகிகளும், ஒரு புரோக்கரும் கைது!
கோவை: கோவையில் மசாஜ் செய்கிறோம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய புரோக்கர் ஒருவரையும், 3 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.
குனியமுத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் படை திடீரென அந்த வீட்டி்ல ரெய்டு நடத்தியது. அதில் கேரளாவைச் சேர்ந்த 35 வயது பிந்து, 40 வயது ஸ்ரீதேவி, 33 வயது பூஜா ஆகியோர் சிக்கினர். இவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த ஆலப்புழாவைச் சேர்ந்த
இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆலப்புழாவை சேர்ந்த 35 வயது புரோக்கரையும் போலீஸார் கைது செய்தனர். அவரது பெயர் சொஹைல். வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த வேலையைச் செய்து வந்தார் சொஹைல்.
இவர்கள் மசாஜ் செய்கிறோம் என்ற பெயரில் விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளனர். ரூ. 2500 கட்டினால் போதும், மசாஜ் செய்வதோடு மஜாவாகவும் இருக்கலாம்.
4 பேரும் தற்போது கோவை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.