பெரம்பலூர் அருகே பயங்கரம்.. தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 3 பேர் பலி
பெரம்பலூர் அருகே சாலைவிபத்தில் 3 பேர் பலியானார்கள்,
Recommended Video
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று 40 பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ், நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்ததில், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.