வேலூர் அருகே பயங்கரம்.. பைக் - ஆட்டோ மோதி விபத்து: சிறுமி உள்பட 3 பேர் பலி; 6 பேர் படுகாயம்
வேலூர்: வேலூர் அருகே பைக்கும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தொம்மசிமேடு என்ற இடத்தில் பல்சர் பைக் - ஆட்டோ மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆபுலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது பாதி வழியிலேயே காவியா (10) என்ற பெண் குழந்தை உட்பட பீகாரை சேர்ந்த கோபி (25), அலேக் (21) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த மகேந்திரன் (23), சரஸ்வதி (24), சுரேந்தர்சர்மா (17), விஜேந்திரகுமார் (19), பரத் (20) ஆகிய 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.