மகளையே பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள்: திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி
பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
Recommended Video
திருச்சி: பெற்ற மகளையே பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தைக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனையை விதித்து அதிரடி தீர்ப்பு அறிவித்துள்ளது.
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் கென்னடி 44. அவருக்கு 4 குழந்தைகள். ஆனால் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், 4 குழந்தைகளையும் கென்னடியே வளர்த்து வந்தார்.
இந்நிலையில், தன்னுடைய 11 வயது மகளை பெற்ற தந்தையே பலமுறை தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்ததால், இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் கென்னடிமீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது.
அந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பினை திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதன்படி கென்னடிக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கியதுடன், அந்த 3 ஆயுளையும் தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் கென்னடிக்கு விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இதுதவிர. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.