சேலம், தஞ்சை, திருச்சி மேயர்களுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு- 8 மேயர்களுக்கு சீட் இல்லை!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் சைதை துரைசாமி உட்பட 8 சிட்டிங் மேயர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. நெல்லை, சேலம், தஞ்சாவூர் மேயர்களுக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. அக்டோபர் 21-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை அறிவித்த மறுநாளே அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் சேலம் மேயர் சவுண்டப்பன், தஞ்சாவூர் சாவித்ரி, திருச்சி ஜெயா ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிட்டிங் மேயர்கள் சென்னை சைதை துரைசாமி, திண்டுக்கல் மருதராஜ், ஈரோடு மல்லிகா பரமசிவம், நெல்லை புவனேஸ்வரி, தூத்துக்குடி அந்தோணி கிரேஸ், வேலூர் கார்த்திகாயினி, திருப்பூர் விசாலாட்சி, கோவை ராஜ்குமார் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.