மதுரையில் விபத்து.. பேருந்து டயருக்கு அடியில் பைக்குடன் சிக்கிய மூவர்.. உயிர் பிழைத்த அதிசயம்
Recommended Video
மதுரை: மதுரையில் நடந்த விபத்தில் பேருந்து டயருக்கு அடியில் பைக்குடன் சிக்கிய மூன்று பேர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
மதுரையில் ஒரு குறுகலான தெருவில் பைக்கில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
அப்போது உடனடியாக வலது பக்கம் திரும்பினர். அதே நேரத்தில் எதிரே ஒரு அரசு பேருந்தும் வந்து கொண்டிருந்தது. பேருந்து உடனடியாக வலது புறத்தில் திரும்பியதால் பைக் ஓட்டியவர்களாலும் பேருந்து ஓட்டியவர்களாலும் விபத்தை தடுக்க முடியவில்லை.
இதையடுத்து டயருக்கு அடியில் பைக்குடன் சிக்கி கொண்டனர். அவர்கள் பல மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டனர். பின்னர் ஒரு இடத்தில் போய் பேருந்து நின்றது.
#WATCH: Dramatic visuals of 3 men miraculously surviving in Madurai after they came under the wheels of a moving bus belonging to #TamilNadu State Transport Corporation. Bikers were reportedly in an inebriated state. They were admitted to hospital with minor injuries. (16.09.18) pic.twitter.com/1zY621LZlr
— ANI (@ANI) September 22, 2018
அப்போது பேருந்துக்கு அடியில் இருந்து லேசான காயங்களுடன் மூவரும் எழுந்து வந்தனர். இதை பார்த்த மக்களுக்கு கடும் அதிர்ச்சி. காரணம் அவர்கள் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் அப்பளம் போல் நசுங்கியது.
எனினும் அவர் பம்பரில் சிக்கியதால் காயத்துடன் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இது வைரலாகி வருகிறது.