ஜாமீனில் வந்த 3 பேர் வெட்டிப் படுகொலை... காரில் வந்து குதறிப் போட்டுவிட்டு தப்பிய 13 பேர் கும்பல்
கோவை: சூலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். தப்பிய ஓடிய 13 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் சிந்தாமணி புதூர் அருகே நான்கு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கார் ஒன்றில் வந்த 13 பேர் கொண்ட கும்பல் நான்கு பேரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.
இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஒருவர் கோவை அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட 3 பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரும் மயிலாடுதுறை ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை சூலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.