For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் அருகே கனமழை.. சுவர் இடிந்து விழுந்ததில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர் பலி!

கனமழைக்கு கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் அருகே சுறாவளி காற்றுடன் கூடிய கன மழையில் சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சேலத்தில் நேற்று மாலை திடீர் என சூறை காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் சேலம் அருகே நெய்க்காரப்பட்டி அருகே உள்ள அடையார் ஆனந்தபவன் உணவு விடுதியின் மேலே அமைக்கபட்டிருந்த அலங்கார சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. உணவகத்தின் மேல் கூரை தகரத்தினால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தினால் சுவர் விழுந்தது. இதில் ஓட்டிலின் கட்டிடம் பூமிக்குள் ஒருபாதி இறங்கியது.

3 people kills in heavy snowfall near Salem

அப்போது, உணவு அருந்தி கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த நூருல்அமீது மற்றும் உணவாக ஊழியர் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஈரோட்டை சேர்ந்த சையத் அலி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவகம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, இடிபாடுகளை மீட்டனர்.

3 people kills in heavy snowfall near Salem

இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது உரிய பாதுகாப்பின்றி கட்டிடம் கட்டப்பட்டதே இந்த விபத்திற்கு காரணமாக அமைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் சேலத்தில் வீசிய சூறை காற்றுக்கு பல இடங்களின் மரங்கள் வேருடன் சாய்ந்தது. மேலும் பல்வேறு இடங்களில் வலுவிழந்த கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், விளம்பர பதாதைகளும் கிழிந்து தொங்கியது,

English summary
The wall of the hotel fell in the saddle. Two of those who were eating food died in the ruins. Another died in the treatment of the hospital. As the restaurant collapsed, the Fire and Police Department rushed to the ground and recovered the ruins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X