For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்தநாள் கொண்டாடிய போது சோகம்.. கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி

காட்பாடியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர், காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக் கழகம் பின்புறம் உள்ள குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். பிறந்த நாள் கொண்டாடச் சென்ற போது இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக் கழகத்தில் படித்து வந்த அரிக்குமார், பிரவீன், சித்தார்த் மற்றும் பிரீத் ஆகிய 4 மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஈசன் ஓடை பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி குட்டை பகுதிக்கு சென்றனர்.

3 students dead in katpadi

அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது முகத்தில் கேக் பூசியதால் அதை கழுவச் சென்ற மாணவர் எதிர்பாரதவிதமாக தவறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற 2 மாணவர்களும் தண்ணீரில் குதித்துள்ளனர். இந்நிலையில் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

3 students dead in katpadi

பின்னர் தகவல் அறிந்து வந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவத்தின் போது உடன் இருந்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த மற்றோரு மாணவன் பீரீத்தை காட்பாடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

English summary
3 students dies in stone quarry in katpadi near VIT University
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X