For Quick Alerts
For Daily Alerts
Just In
ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி... 2 பேர் கவலைக்கிடம்
ஸ்ரீ பெரும்புதூரில் விஷ வாயு தாக்கியதில் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் இரு தொழிலாளர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹோட்டல் ஊழியர்கள் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் இரு தொழிலாளர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் போந்தூரில் ஒரு ஹோட்டல் உள்ளது. இங்கு கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் தொட்டியை சுத்தம் செய்ய 5 தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
3 workers who cleans septic tank breathes poisonous gas near Sriperumbathur and they 3 died. 2 more workers condition is critical.