ஈரோட்டில் 3 வயது சிறுமியிடம் சில்மிஷம்... மருத்துவமனை ஊழியர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 3-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் அங்குராஜ் (40). அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தின் போது, 3 வயது சிறுமி அங்குராஜின் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதைக்கண்ட அங்குராஜ், சிறுமியுடன் விளையாடுவது போல விளையாடி, அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கிகொடுத்து தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் வீட்டினுள் வைத்து அந்த சிறுமியிடடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை சத்தம் போட்டு அழுதுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தாயார் தேடியுள்ளார். இதனிடையே குழந்தையின் அழுகுரல் அங்குராஜ் வீட்டினுள் இருந்து வருவது தெரியவந்தது. வீட்டினுள் சென்று பார்த்த சிறுமியின் தாய், அங்குராஜ் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அங்குராஜை பிடித்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்குராஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.