For Daily Alerts
Just In
கோவை அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு.. பிரசாதம் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி!
கோயில் விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
கோவை: கோயில் விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீர் வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, மேட்டுப்பாளையம் நாடார் காலனி ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், சமையலுக்கு ஏற்றதல்ல என குறிப்பிடப்பட்டுள்ள நெய்யை கொண்டு பொங்கல் உள்ளிட்ட பிரசாதம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கும் வழங்கி உள்ளனர். நேற்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
English summary
There was a sudden vomiting in the temple festival near Kovai. Pongal offered with the ghee that is not suitable for cooking at this festival. 30 people including 2 children who had eaten had vomiting. All of them have been admitted to Mettupalayam Government Hospital.
Story first published: Wednesday, April 4, 2018, 16:15 [IST]