For Daily Alerts
Just In
நெல்லை: மாதா கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி- 19 பேர் படுகாயம்
நெல்லை: நெல்லை மாவட்ட பரதர் உவரியில் மாதா கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரதவர் உவரியில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி இன்று வலம் வந்தது.
இந்த சப்பரத்தை சுமார் 20 பேர் இழுத்து வந்தனர். அப்போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி சப்பரத்தின் மீது மோதியது.
இதில் சப்பரத்தை இழுத்துச் சென்ற 20 பேர் படுகாயமடைந்து திசையன்விளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ், கிளைவ், ராஜா, நிமோ ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 19 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
4 devotees electrocuted during a temple festival in Nellai on Thursday.