மதுரை: திட்டிய ஆசிரியர்... எலிமருந்து சாப்பிட்டு 4 மாணவிகள் தற்கொலை முயற்சி
திருமங்கலம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: திருமங்கலம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் திட்டியதால் எலி மருந்து குடித்து அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வகுப்பறையில் மயங்கிய 4 மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு, 11, 12வது பொதுத்தேர்வுகளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. மாணவர்கள் மும்முரமாக படித்து வருகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தி வருகின்றனர். சரியாக படிக்காத மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கண்டிப்பது வாடிக்கையாள நிகழ்வுதான் இந்த நிலையில் இன்று திருமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியை திட்டியதால் 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.