சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை : சர்வதேச விமான நிலையத்தில் பொருட்களுக்கு மத்தியில் மறைத்து கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக பயணிகளின் உடைமைகளை சோதனையிடுவது போல இன்று காலையும் அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடைபெற்றது.
அப்போது சிங்கப்பூரிலிருந்து சென்னை விமானநிலையம் வந்த பயணியிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பொருட்களுக்கு இடையே தங்கத்தை வைத்து கடத்திய இப்ராஹிம் மரைக்காயர் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ரூ.1.4 கோடி மதிப்புள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளார்.
இப்ராஹிம் இந்த தங்கத்தை யாருக்காக கொண்டு வந்தார். இந்த கடத்தலில் யாருக்கெல்லம் தொடர்பு என்பது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தக் கடத்தலில் இப்ராஹிம் எத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறார், சிங்கப்பூர் விமான நிலைய சோதனையின் போது இது தப்பியது எப்படி என்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.