For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தமிழ், ஜனா, சசி, பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரிய சர்ச்சையானது. பெரியாரின் சேலம் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கு திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

4 people arrested for trying to throw Petrol Bomb at Gurumoorthy house

இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் வெளியாகி உள்ளது. 6 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர்.

அங்கு இருந்ததா? சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை? வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்! அங்கு இருந்ததா? சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை? வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்!

இந்த குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தமிழ், ஜனா, சசி, பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த 4 பேரும் யாருடைய உத்தரவின் பெயரில் செயல்பட்டனர், மீதம் உள்ள 2 பேர் யார் என்று விசாரணை வருகிறது.

English summary
4 people arrested for trying to throw Petrol Bomb at Gurumoorthy house yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X