For Quick Alerts
For Daily Alerts
Just In
காஞ்சிபுரத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி; 10 பேர் படுகாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
செய்யூர் அருகே கொளத்தூர் சோதனை சாவடி மேம்பாலம் சாலையில் இன்று அதிகாலையில் இந்த விபத்து நேரிட்டது.
பயணிகளுடன் நாகப்பட்டினம் வேளாங்கண்ணியிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அந்தப் பேருந்து ஆம்னி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
An Omni bus got crashed in Kanchipuram; 4 died, 10 people injured and admitted in Hospital.
Story first published: Saturday, July 4, 2015, 18:35 [IST]