For Daily Alerts
Just In
பவானி ஆற்றில் குளிக்க சென்ற 4 பெண்கள் நீரில் மூழ்கி பலி - இருவரின் உடல்கள் மீட்பு
பவானி ஆற்றில் குளிக்க 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஈரோடு: பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்கள் பஹ்ருனிஷா 25, ரகமத்நிஷா 18, பர்வீன் 33, திரிதோஷ். இவர்கள் நால்வரும் இன்று பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதில் 4 பேரும் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி உயிரிழந்த 4 பேரில் பஹ்ருனிஷா மற்றும் ரகமத்நிஷா ஆகியோரது உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. பர்வீன், திரிதோஷ் ஆகியோரின் உடலை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments
English summary
Four women who were bathing in the Bhavani river drowned in water. Four women from Sathyamangalam were bathing in the Bhavani river. At that time, 4 people died in water. The police and fire department have been informed about this. Two of the dead have been recovered and the body continues to search for other bodies.